கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 03 பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஆண், , முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆண், களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண், தெஹிவளை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஆண் மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment