-அஸ்லம் ஸ்.மௌலானா-
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, கட்சி தலைமையகத்தில் வைத்து திங்கட்கிழமை (08) மாலை நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் றிஸ்கான் முகம்மட் கலந்துரையாடினார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் அம்பாரை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றியபோது இப்பகுதி இளைஞர்களுக்காக பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தமையும் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவராகவும் மெட்ரோ மிரர் நிறுவனத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினராகவும் மற்றும் பல சிவில் அமைப்புகளின் முக்கிய பிரதிநிதியாகவும் இருந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
www.metromirror.lk
metromirrorweb@gmail.com
No comments:
Post a Comment