அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவை நிச்சயம் நிறுத்துவேன் என அவருக்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்காகவே நான் பதவியை இராஜினாமா செய்துள்ளேன்.
பஷில் ராஜபக்ஷ விரைவில் நிதி அமைச்சராகப் பதவியேற்பார். அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் அவரே. அதற்காக நான் முன்னின்று உழைப்பேன்- என கெட்டகொட மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment