Monday, September 13, 2021

யார் எதிர்த்தாலும் காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும்; அமைச்சரவை உறுதி என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி..!

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

யார் எதிர்த்­தாலும் இலங்­கையில் காதி நீதி­மன்­றங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­ட­வுள்­ளன. முஸ்­லிம்­களின் விவா­க­ரத்து உட்­பட குடும்ப விவ­கா­ரங்­களை பொது நீதி­மன்­றங்­களே கையா­ள­வுள்­ளன. இதற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ரவை ஏக­ம­ன­தாக வழங்­கி­யுள்­ளது. 30 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் நான் ஒரு­வனே முஸ்லிம். அதுவும் நான் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வ­னல்ல. நான் தேசியப் பட்­டியல் உறுப்­பினர்- என நீதி­ய­மைச்சர் அலி சப்ரி தெரி­வித்­துள்ளார்.

காதி நீதி­ப­திகள் போரத்தின் நிர்­வா­கி­க­ளுடன் சூம் செய­லி­யூ­டாக மேற்­கொண்ட கலந்­து­ரை­யா­டலின் போதும், தமிழ் ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லிலும் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

காதி நீதி­மன்ற முறை­மையை தக்க வைத்­துக் ­கொண்டு முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில திருத்­தங்­களைச் செய்­வ­தற்கே நான் தீர்­மா­னித்­தி­ருந்தேன். ஆனால் அமைச்­ச­ரவையானது முஸ்­லிம்கள் ஏனைய பொது நீதி­மன்­றத்­துக்குள் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்றும் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான சட்டம் தேவை­யில்லை எனவும் பல­தார மணம் இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்டும் என்றும் உறு­தி­யான தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டுள்­ளது. அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தை என்னால் மீற முடி­யாது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை திருத்த வேண்டும் என பலர் கூறு­கி­றார்கள். இதே­வேளை ஒரு தரப்­பினர் இச்­சட்­டத்தில் மாற்­றங்கள் தேவை­யில்லை என்­கி­றார்கள். ஆனால் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கும், காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்­வ­தற்கும் அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இச்­சட்டம் அமு­லாக்­கப்­படும் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. இதனை எவ­ரா­வது ஏற்றுக் கொள்­ளா­விட்டால் உயர் நீதி­மன்­றுக்குச் செல்­லலாம்.

நான் எடுத்த தீர்­மா­னத்தை இலே­சாக கைவி­டு­ப­வ­னல்ல. நான் யாருக்கும் பயப்­ப­டு­ப­வ­னு­மல்ல. எங்­க­ளது அர­சாங்கம் பற்றி எல்­லோ­ருக்கும் தெரியும். சிங்­கள பௌத்­தர்கள் 98 – 99 வீதத்­தினர் எங்களுக்கு வாக்களித்தார்கள். இலங்கையர் என்ற அடையாளத்தின் மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர்களே. இதற்காகவே நாம் போராடுகிறோம்- என்றார்.

நன்றி: விடிவெள்ளி

3 comments:

  1. அடிப்படை மனித உரிமைகள் III:16:1, 16:2, 17

    ReplyDelete
  2. சிறு நீரை அல்லாஹ் சிறிது நேரம் தடுத்து வைத்துக் கொண்டால், விடுத்துக் கொள்ள முடியாது மூத்திரப் பையோடு அலைவதா? அமைச்சரவைக் கட்டளை ஆண்டவன் கட்டளையை மீறிட முடியாது அதற்கு அடிப்படை மனித உரிமை இடந் தராது.

    எத்னையோ சட்டங்கள் இருந்தாலும், குடு வியாபாரத்தை நிறுத்திட முடிந்ததா?

    CWE இறக்குமதி செய்த சீனிக் கொள்கலனில் கையும் களவுமாக கடத்தி வரப்பட்ட 320 கோடி பெறுமதியான கொக்கைனுக்கு என்ன நடந்தது? அந்த நபரைக் கண்டு பிடித்தீர்களா.

    பாஸ்கு பிரகார சூத்திரதாரியையாவது பிடிபீர்களா. 30 அமைச்ர்கள் அதைப் பற்றி பேசவில்லையா.

    ReplyDelete
  3. அலிசப்ரி ஒரு கையாலாதவன், என்ன செய்ய மருமையில் சொல்லவேண்டும் பதவிக்கு தலை வணங்கியதாக,,,

    ReplyDelete