Monday, October 4, 2021

உலகில் அதியுச்ச ஊழல் தலைவர்கள் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ..!

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இதில் இலங்கையின் பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினருமான முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நிரூபமா ராஜபக்ஷ பிரதி நீர்வளங்கள் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், செக் குடியரசு பிரதமர் எண்ட்ரேஸ் பாபிஸ், கென்ய ஜனாதிபதி உஹுரு, சைப்ரஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தேசியேட்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ, பாகிஸ்தான் அமைச்சர்கள் சிலர் உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் பல மில்லியன் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக ‘பென்டோரா பேப்பர்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

இந்த ஊழல் தலைவர்கள் வரிசையிலேயே நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. D/M



No comments:

Post a Comment