Wednesday, January 12, 2022

பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்ற ஏ.எல்.எம்.அஸ்லம் பாராட்டி கௌரவிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட சம்மாந்துறை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், அப்பிரதேச செயலகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர். எஸ்.எல்.ஆதம்பாவா உட்பட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், பிரதம கணக்காளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் முதல் நிலையில் சித்தியடைந்திருந்த இவர் இலங்கை திட்டமிடல் சேவையில் சித்தியடைந்து, பல பிரதேச செயலகங்களில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி, தற்போது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருகின்றார்.

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர், சாய்ந்தமருதை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் மர்ஹூம் அஹ்மட் லெப்பை தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment