Tuesday, June 21, 2022

சாய்ந்தமருது அல்ஹிலால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு..!

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட வசதி குறைந்த மாணவர்களுக்கு சப்பாத்து, புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் யூ.எல்.நசார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம்.பௌஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக், பொறியியலாளர் எம்.சீ.கமால் நிஸாத், டாக்டர் நஸ்ரின் ஸாஜிதா நிஸாத், பிரதி அதிபர் எம்.எச்.நுஸ்ரத் பேகம், பகுதித் தலைவர் எஸ்.முஸம்மில் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

சதகா புலடின் வெல்பெயார் பௌண்டேஷன் அனுசரணையில் சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் 51 மாணவர்களுக்கு இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த பொறியியலாளர் எம்.சீ.கமால் நிஸாத், அவரது துணைவியார் டாக்டர் நஸ்ரின் ஸாஜிதா நிஸாத் மற்றும் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.எல்.எம்.இல்யாஸ் ஆகியோருக்கு அதிபர் யூ.எல்.நஸார் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.


www.metromirror.lk
metromirrorweb@gmail.com
Whatsapp 0779599929

No comments:

Post a Comment