Wednesday, September 27, 2023

உள்ளுராட்சி சபை ஊழியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு ஆளுநர் கோரிக்கை; அமைச்சரவை அங்கீகாரம் பெறுதற்கு பிரதமர் உறுதி.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்கிழமை (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் எடுத்துரைத்தார். 

இதில் ஒரு அம்சமாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் பல வருட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கப்படாத நிலையில் கணிசமானவர்கள் பணிபுரிகின்றனர் எனவும் நிரந்தர நியமனத்திற்கான வயதையும் தாண்டிய நிலையில் பலர் உள்ளனர் எனவும், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இவர்களுக்கு அவசரமாக நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் வலியுறுத்தினார். 

ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர், உள்ளுராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

No comments:

Post a Comment