Friday, October 27, 2023

கல்முனை மாநகர வர்த்தகர்களுக்கு நுகர்வோர் அதிகார சபையின் விழிப்புணர்வுக் கருத்தரங்கு.!

-ஏ.எஸ்.மெளலானா-

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட செயலகம் கல்முனை மாநகர சபையுடன் இணைந்து இம்மாநகர ஆள்புல எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களுக்கு ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை (27) மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட  நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி முஹம்மட் ஸாஜீத் ஸமான் பிரதான வளவாளராக கலந்து கொண்டு, வியாபார செயற்பாடுகளின் போது வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட, ஒழுங்குகள் மற்றும் விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

இதன்போது வர்த்தகர்களினால் எழுப்பப்பட்ட வினாக்கள் மற்றும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கர்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான ஏ.ஏ.ஏ. ஸர்பான், ஏ.பீ.எம். றிப்சாத் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.












No comments:

Post a Comment