Sunday, November 5, 2023

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள்.!

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி  உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் நேற்று (04) மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் பி.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் மட்டக்களப்பு, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தொழிற்சங்கத்தினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய விடயங்கள் பேசப்பட்டதையடுத்து புதிய நிருவாகத் தேர்வும் இடம்பெற்றது.

இதன்போது பின்வரும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிருவாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவராக ஏ.எல்.எம். பாறூக், செயலாளராக பி.ரி. ஆதம்பாவா, பொருளாளராக கே. சசிதரன், உப தலைவராக எஸ். ஜாபீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிருவாக சபை உறுப்பினர்களாக பி. தியாகராஜா, எச்.எம்.கே. ரஹ்மான், ஏ.அமலராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி  உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் நிருவாகத்தின் ஆயுட்காலம் 3 வருடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment