மாத்தறை மாவட்ட கொடவில்ல விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான ஓபன் மாஸ்டர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் கல்முனைப் பிரதேசத்தை சேர்ந்த இரு வீரர்கள் பதக்கம் வென்று கல்முனை மாநகருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
விக்டோரியஸ் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகரும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பெஸ்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான ஏ.எம். றியாஸ் அவர்கள் குண்டெறிதல் நிகழ்ச்சியில் பங்குபற்றி 3ஆம் இடத்தினை பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.
அவ்வாறே கல்முனை சனிமெளன்ட் விளையாட்டு கழகத்தின் வீரரும் கல்முனை மாநகர சபை தீயணைப்பு படை உத்தியோகத்தருமான ஏ.எல்.எம் ஆஷாத் அவர்கள் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் பங்குபற்றி 3ஆம் இடத்தினை பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.
அம்பாறை மாவட்டத்திற்கும் கல்முனை மாநகரத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ள இவ்விரு வீரர்களும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment