Wednesday, June 19, 2024

சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வு; முஷாரப் எம்.பியினால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை.!

2005 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள் இன்று (2024-06-19) சமர்ப்பித்திருந்தார். 

குறித்த பிரேரணையில், 

2005 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகள் இதுவரை எந்த பதவியுயர்வுகளும் இன்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 

அபிவிருத்தி துறையில் 20 வருட அனுபவமும் தேர்ச்சியும் பெற்றிருக்கின்ற குறித்த உத்தியோகத்தர்களை, விசேட பரீட்சை ஒன்றின் மூலம் திட்டமிடல் சேவைக்குள் உள்வாங்குமாறும், இந்த உத்தியோகத்தர்களுக்கு முதலாம் தரத்திற்கு மேல் தொடர்ந்து பதவியுயர்வுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரை முஷாரப் எம்பி அவர்கள் கோரியிருக்கிறார்.  

இதற்கு முன்னரும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் வெவ்வேறான மூன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைகளை  சமரப்பித்திருக்கிறார். 

1985 இற்கு முன்னார் விவசாய நிலங்களாக இருந்து போர்காலத்தில் கைவிடப்பட்ட காணிகளை வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்கள் அபகரித்து வைத்துள்ளது. இவ்வாறு காணிகளை இழந்த விவசாயிகளுக்கு, ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் குறித்த காணிகளை விவசாயச் செய்கைக்காக விடுவித்து வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் தனது முதலாவது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சில மாதங்ளுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார். 

அப்பிரேரணையின் பலனாக கிழக்கு மாகணத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை, விடுவிப்புச் செய்யப்படுவதற்கான பணிகள் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அவை இன்னும் சில வாரங்களில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட இருக்கின்றன. 

அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான மாற்று நிலம் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படாமை, தொடர்ச்சியாக கரும்புச் செய்கை நட்டத்தில் இயங்குகின்றமை, மாற்று பயிர்செய்கைக்கு மாறுவதற்கு கம்பனி அனுமதிக்காமை உள்ளிட்ட பல விடயங்களை மையப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் தனது இரண்டாவது ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்தார். அதன் பலனாக கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. 

மூன்றாவது பிரேரணையாக, யுத்த காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய பகுதிகளில் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் ஆசிரியப் பணிக்காக இணைக்கப்பட்டவர்கள், 15-20 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர்களாக  பணியாற்றி வருகின்ற போதிலும் அவர்களின் நியமனம் இதுவரை கல்வயமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை. 

இதனைச் சுட்டிக்காட்டி அவர்களை கல்வியமைச்சின் கீழ் ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்திருந்தார். அப்பிரேரணை இப்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. வெகுவிரைவில் அவ் உத்தியோகத்தர்கள், கல்வியமைச்சின் கீழ் ஆசிரியர்களாக நியமனம் பெற உள்ளார்கள். 

2020 இல் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண எம்பிக்களுள் முஷாரப் எம்பி தவிர்ந்த வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இதுவரை எந்தவொரு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் இந்த நான்கைந்து வருடங்களுக்கும் சமரப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது. 

பாராளுமன்றில் ஆற்றப்படும் உரைகள் மக்களைக் கவருமே தவிர, அவை மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கொண்டு சேர்க்காது. 

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் மற்றும் அமைச்சுசார் ஆலோசணைக்கு கூட்டங்களில் சமர்ப்பிக்கடும் விடயங்களே அமைச்சுக்கள், திணைகளால் கவனத்தில் எடுக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்கின்றன. 

பாராளுமன்றில் உபயோகமின்றி கவர்ச்சிக்காக பேசுவதைக் குறைத்து விட்டு சபை ஒத்திவைப்பு வேளைகள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டங்கள் என எதனையும் விரயம் செய்துவிடாது, தனது பாராளுமன்ற பதவிக்காலத்தினை மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டடையும் பயன்மிகு தருணங்களாக உபயோகித்து வரும் சுறுசுறுப்பான ஒரு திறன்மிகு பாராளுமன்ற உறுப்பினராக இயங்கிவரும் முஷாரப் எம்பி அவர்களின் ஒப்பற்ற பணி மகத்தானது.

-செயிட் ஆஷிப்




No comments:

Post a Comment