Wednesday, July 3, 2024

மாளிகைக்காடு சபீனா வித்தியாலய அதிபர் காரியாலயம், நடைபாதை திறப்பு.!

பைசல் காசிம் எம்.பிக்கு விசேட கெளரவம்..!


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் புனரமைக்கப்பட்ட மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் காரியாலயம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்களுக்கிடையிலான நடைபாதை ஆகியவற்றை திறந்து வைக்கும் "கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா" நேற்று முன்தினம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

பாடசலையின் அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம், விஷேட அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர், சிறப்பு அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்ஜீவன் மற்றும் சாய்ந்தமருது, காரைதீவு கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மாளிகைக்காடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எச். நாஸர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு சிறப்பு நுழைவாயில் "Gateway" அமைப்பதற்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் நீண்ட காலமாக பல்வேறு பௌதீக உட்கட்டமைப்பு பணிகளுக்கு தனது நிதிப் பங்களிப்பினை வழங்கி சபீனாவின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பக்க துணையாக நிற்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கு நன்றி பாராட்டி "மக்கள் ஒளி" எனும் நாமம் சூட்டி பாடசாலைச் சமூகம் அவரைக் கெளரவித்தது.

இந்நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டிய பாடசாலை மாணவர்கள் பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

-செயிட் ஆஷிப்
















www.metromirror-lk

metromirrorweb@gmail.com 

WhatsApp 0779599929




No comments:

Post a Comment