Monday, August 26, 2024

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஜப்பான் பயணம்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

கிழக்கு மாகாண சபையின் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளரும் கல்முனை மாநகர ஆணையாளருமான என்.எம். நௌபீஸ் அவர்கள் விசேட புலமைப்பரிசில் பெற்று இன்று திங்கட்கிழமை (26) ஜப்பான் பயணமாகிறார்.

ஜப்பானில் ஒரு மாத காலம் இடம்பெறவுள்ள உள்ளூர் தொழில்துறை மேம்பாடு குறித்த அறிவுப் பகிர்வு பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.

ஜப்பானிய அரசாங்கத்தினால் நடாத்தப்படுகின்ற இப்பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றுவதற்கான புலமைப்பரிசில் அனுசரணையை JICA எனும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

இப்பயிற்சியில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் நாட்டு அதிகாரிகளுக்கு மேலதிகமாக 06 நாடுகளில் இருந்து தலா ஒருவர் வீதம் 06 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண சபையின் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு பணிப்பாளரும் கல்முனை மாநகர ஆணையாளருமான என்.எம். நௌபீஸ் அவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது மாநகர ஆணையாளரான என்.எம். நௌபீஸ் அவர்கள் இத்தகைய உயர்தரமான உன்னத வாய்ப்பைப் பெற்று ஜப்பான் செல்வதை முன்னிட்டு கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆணையாளரை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment