-அஸ்லம் எஸ்.மெளலானா-
இம்முறை (2024) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 49 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளனர்.
அதேவேளை பரீட்சைக்குத் தோற்றிய 231 மாணவர்களில் 168 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 219 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இப்பெறு பேறுகளின் பிரகாரம் இப்பாடசாலை சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன் கல்முனை கல்வி வலயத்திலும் முன்னணியில் திகழ்கிறது.
இதன் மூலம் இப்பாடசாலை வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியிருக்கிறது.
இச்சாதனை பெறுபேற்றினை அடைவதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்த பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் அவர்களுக்கும் பிரதி மற்றும் உதவி அதிபர்களுடன் மாணவர்களுக்கு போதித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை (23) வாழ்த்தி வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment