-அஸ்லம் எஸ்.மெளலானா-
காலம்சென்ற சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.
இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஏ.ஆர்.எம். அட்வர்டைசிங் அனுசரணையில் ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் யூ.எல். யாக்கூப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகவும் முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கெளரவ அத்தியாகவும் கலந்து கொண்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக், மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம். ஹனீபா, அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸாக், பிறை எப்.எம். பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், அதிபர் யூ.எல். நஸார், சிரேஷ்ட ஒலிபரப்பாளர்களான சட்டத்தரணி ஏ.எம். தாஜ், ஏ.சி. றாஹில், என்.றபீக் மற்றும் கவிஞர் எம்.எம்.எம். பாஸில் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதன்போது ஊடக, கல்வி மற்றும் அரசியல் துறைகளில் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் வகிபாகம், அர்ப்பணிப்புடனான உன்னத சேவைகள் பற்றியும் அவரது ஆளுமைகள் மற்றும் சிறப்புகள் குறித்தும் அதிதிகள் நினைவுகூர்ந்தனர்.
நிகழ்வின் ஓர் அங்கமாக மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் சகோதரரான சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் அவர்களை பணிப்பாளராகக் கொண்ட றிஸாலத் இணைய தொலைக்காட்சியின் விஸ்தரிப்பை மையப்படுத்தி அதன் ஆலோசனை சபையினருக்கான அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள் மற்றும் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் உறவினர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment