Sunday, February 23, 2025

நிசாம் காரியப்பர் எம்.பியினால் அபிவிருத்தி முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!

-அஸ்லம் எஸ். மெளலானா-

கல்முனைத் தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தன்னால் முன்மொழியப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட சில அவசர வேலைத் திட்டங்களுக்கான நகல் வரைபுகளை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்திக அபேவிக்ரமவிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இவற்றுள் வாகன நெரிசல் மிக்க சாய்ந்தமருது நகரில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக அங்கு வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கும்

கல்முனை மாநகரில் வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து சமிக்ஞை கட்டமைப்பை அமைப்பதற்குமான முன்மொழிவுத் திட்டங்களையும் நிசாம் காரியப்பர் எம்.பி சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன் கல்முனை மாநகர மற்றும் மாளிகைக்காடு கடல் பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக காணப்படுகின்ற கற்கள் மற்றும் கழிவுகளை அகற்றல்,

கல்முனை மேல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சட்டத்தரணிகளுக்கான நூலகத்தை டிஜிட்டல் மயப்படுத்தல்,

கல்முனை மாநகரில் உள்ளூர் மற்றும் சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக தற்காலிக விற்பனை கூடங்களை அமைத்தல் போன்ற முன்மொழிவுகளையும்  அம்பாறை மாவட்ட செயலாளரிடம் அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

No comments:

Post a Comment