Wednesday, November 10, 2021

ஒலுவில் பிரதேசத்தில் ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் குடிநீர் வசதி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொதுக் கிணறுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பிரதேச மக்கள் சிலரின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையேற்று, ரஹ்மத் பவுண்டேஷன் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனத்தின் அனுசரணையுடன் இக்கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இடம்பெற்ற கையளிப்பு நிகழ்வில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த பயனாளிகளிடம் இவற்றைக் கையளித்தார்.

இவ்வாறான பயன்மிக்கதும் நிலைபேறானதுமான சேவையை தமது அமைப்பு முன்னெடுப்பதற்கு உதவிய வை.டபிள்யு.எம்.ஏ. நிறுவனத்துக்கு தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இதன்போது அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.


No comments:

Post a Comment