Thursday, December 23, 2021

பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும்..! 10 வீதம் விலை அதிகரிப்பு அவசியம்..!

பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பால்மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்பட்டபோது உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்திருந்தது.

அந்தக் காலப்பகுதியில் இருந்ததை விட தற்போது 10% அதிகமாக இருப்பதாகவும் அதற்கேற்ப மீண்டும் விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும்.

பால் மாவை கொள்வனவு செய்வதற்கான டொலர் தட்டுப்பாடு, கடன் கடிதம் (LOC) பெற முடியாமல் போனமை, ஏற்றுமதியில் தாமதம் மற்றும் வரிகள் என்பன இலங்கையில் பால் மா தட்டுப்பாட்டுக்கான பிரதான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment