Tuesday, December 28, 2021

ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் கல்முனை, சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு கோப்ரா LED மின்விளக்குகள் வழங்கிவைப்பு..!

ரஹ்மத் சமூக சேவை அமைப்பானது அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களுக்கு தமது துரிதமான சேவைகளை செவ்வனே செய்து வருகின்றது.

அந்த அடிப்படையில் கல்முனை அல்பஹ்றியா தேசிய பாடசாலை, கல்முனை அல்மிஸ்பாஹ் பாடசாலை மற்றும் சாய்ந்தமருது அல்ஜலால் ஆகிய பாடசாலைகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த காரணத்தினால் அப்பாடசாலைகளுக்கு மின்விளக்குகள் போட வேண்டிய தேவை காணப்பட்டது. 

எனவே சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பிடம் இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்து தருமாறு தமது கோரிக்கயினை முன்வைத்திருந்தனர்.

அக்கோரிக்கையினை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் ஏற்றுக் கொண்டு கோப்ரா எல். ஈ. டீ. மின் விளக்குகளை சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்களிடம் கையளித்து வைத்தார்.

இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களுடன் கல்முனை அல்பஹ்றியா தேசிய பாடசாலை அதிபர் பைசால் மற்றும் ஆசிரியர் றியால், கல்முனை அல்மிஸ்பாஹ் பாடசாலை அதிபர் ரஸாக் மற்றும் பிரதி அதிபர் ஜின்னா அவர்களும், சாய்ந்தமருது அல் ஜலால் பாடசாலை பிரதி அதிபர் டீ. கே.சிறாஜ் மற்றும் ஆசிரியர்களான அமானுல்லாஹ், அஸ்லம் சுஜா, ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




RM Media Unit

No comments:

Post a Comment