Saturday, January 29, 2022

மாளிகைக்காட்டில் இலவச வைத்திய பரிசோதனை முகாம்..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையும் மாளிகைக்காடு ஸம் ஸம் சனசமூக நிலையமும் இனைந்து ஒழுங்கு செய்திருந்த இலவச வைத்திய பரிசோதனை முகாம் இன்று (29) மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளி கலாச்சார மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது வைத்தியாசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பரின் வழிகாட்டலில் இடம்பெற்ற வைத்திய பரிசோதனை முகாமில் இரத்த அழுத்தம், சீனி மற்றும் சிறுநீரக பரிசோதனைகள் உட்பட பல்வேறு நோய்களுடன் தொடர்புடைய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, அறிக்கைகள் வழங்கப்பட்டன.

பெருமளவிலான பொது மக்கள் இவ்வைத்திய முகாமுக்கு வருகைதந்து பயன் பெற்றுள்ளனர் எனவும் இப்பெறுமதி மிக்க சேவையை இலவசமாக வழங்கியமைக்காக சாய்ந்தமருது வைத்தியாசாலையின் மருத்துவக் குழாமினருக்கு பிரதேச மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் மாளிகைக்காடு சன சமூக நிலையத் தலைவர் எம்.எச்.நாஸர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மாளிகைக்காடு கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.நஜீம் உள்ளிட்ட பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

தொற்றா நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அண்மைக்காலமாக சாய்ந்தமருது வைத்தியசாலையினால் சாய்ந்தமருது பிரதேசத்தின் பல இடங்களிலும் இவ்வாறான வைத்திய பரிசோதனை சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




 

No comments:

Post a Comment