-ஏயெஸ் மெளலானா-
சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையில் இருந்து 44 மாணவரகள் இன்று புதன்கிழமை (21) இந்தியாவுக்குப் பயணமானார்கள்.
இந்தியவின் சென்னையில் எதிர்வரும் 25.06.2023 ஆம் திகதி இந்த சர்வதேச அபாகஸ் போட்டி இடம்பெறவுள்ளது.
ஐகேம் அபாகஸ் ( ICAM Abacus) நிறுவனத்தின் 07 ஆவது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த மாணவர்களில் 44 பேரே இவ்வாறு இலங்கையில் இருந்து சென்றுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இவர்கள் இன்று வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுள் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவர்கள் 4 பேர் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment