Thursday, August 10, 2023

இளைஞர், யுவதிகளுக்கான முதலுதவி பயிற்சிப் பட்டறை.!


-சாய்ந்தமருது செய்தியாளர்-

மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா ற்றும் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டிலும் டைடன் ஆசியன் கல்வி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பிலும் இளைஞர், யுவதிகளுக்கான முதலுதவி பயிற்சிப் பட்டறையொன்று நேற்று புதன்கிழமை (09) புனித சென்ஜோன்ஸ் முதலுதவி படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.

மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் மாவடிப்பள்ளி கிளையின் தலைவரும் சென்ஜோன்ஸ் படைப் பிரிவின் கல்முனை கோட்ட அத்தியட்சகருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் ஆணையாளர் கெப்டன். எம். டி. நௌசாத் வபியினால் முதலுதவி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி சம்பந்தமான எழுத்து மூல மற்றும் செயன்முறை பரீட்சைகளும் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் டைடன் ஆசியன் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்  என். கோகுளதாசன், நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். சர்ஜூன், தலைமை நிர்வாக அதிகாரி ஏ.ஏ.ஏ. அப்ரி, சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் சம்மாந்துறை கோட்ட அத்தியட்சகர் எம்.ஹுசைன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.













No comments:

Post a Comment