Sunday, August 13, 2023

உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு தசாப்தமும் கல்முனை மாநகராட்சி ஆணையாளராக ஒரு வருடத்தையும் பூர்த்தி செய்யும் ஏ.எல்.எம். அஸ்மி.!


இலங்கை நிர்வாக சேவையின் மூத்த SLAS அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் கல்முனை மாநகராட்சி ஆணையாளராக ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அம்பாரை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட ஏ.எல்.எம். அஸ்மி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆதம்லெப்பையின் மகனாவார்.

ஆரம்ப கல்வியை பொத்துவில் மத்திய கல்லூரியிலும், உயர்கல்வியை தலைநகரிலும் கற்று, பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத் துறையில் இளமானி பட்டத்தினையும், பொருளியல் துறையில் முதுமானிப் பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார்.

வங்கி உத்தியோகத்தராக அரச சேவைக்குள் நுழைந்து பின்னர் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளராகவும், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளருமாகவும் கடமையாற்றியதோடு தற்போது கல்முனை மாநகராட்சி ஆணையாளராக கடமையாற்றி வருகிறார்.

ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகி, இலங்கை நிர்வாக சேவையில் 20 வருடங்கள் கடந்து பயனிக்கும் இவர் அரச கடமையினை சட்ட விதிமுறைகளை பேணி தான் எடுத்த உறுதி மற்றும் சத்திய உரை என்பவற்றுக்கு ஏற்ப நேர்மையாக  செய்துவரும் ஒருவராவார்.

அஸ்மியின் சேவைத் தரம், தகுதி மற்றும் உள்ளூராட்சி சேவை அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகிக்க வேண்டிய ஒருவர்.

ஆயினும் மாகாண அதிகார பரவலாக்கத்தில் இன்னும் ஒரு சிங்கமான கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளராக பதவி வகித்து கூட்டுறவுத் துறையை பிரகாசிக்கச் செய்தவர் என்ற அடிப்படையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கி வந்த தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற் கொண்டும் கல்முனை மாநகராட்சி ஆணையாளராக 12 ஆகஸ்ட் 2022 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார்.

மும்மொழி புலமைமிக்கவரான அஸ்மி, 10 வருடங்கள் உள்ளுராட்சி மன்ற அனுபவத்தில் திளைத்து கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறந்த உள்ளூராட்சி மன்றமாக அக்கரைப்பற்று மாநகர சபையை மிளிரச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதோடு கல்முனை மாநகர சபையையும் மிகக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பியுள்ளார்.

கல்முனை மாநகர சபையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட புதிய வரி செலுத்தும் கருமபீடம் அடுத்த வாரம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. முறைப்பாடுகளை தெரிவிக்கும் முறைமையும் அறிமுகமாகிறது.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் உள்ள முஸ்லிம் இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட வரிசையில் முதலாமவராக ஏ. மன்சூரும், இரண்டாவதாக திருமதி ஆர்.யு. அப்துல் ஜெலீலும், மூன்றாமவராக எம்.எம். நஸீரும், நான்காம் இடத்தில் ஏ.எல்.எம். அஸ்மியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

✍️ஜபீர் ஷரிபுடீன்

No comments:

Post a Comment