Monday, March 21, 2022

ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் சம்மந்துறை கைகாட்டி வாய்க்காலுக்கு மேம்பாலம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சம்மந்துறை புளக் ஜே- வெஸ்ட் வண்டு வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல், அன்வர் இஸ்மாயில் வித்தியாலயம் மற்றும் மையவாடி என்பவற்றை ஊடறுத்துச் செல்லும் கைகாட்டி பிரதான வாய்க்காலுக்கு மேம்பாலம் அமைக்கும் வேலைத்திட்டம் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் மஷூரா குழுத் தலைவர் ஹாபிழ் எம்.இர்பான் தலைமையில் நேற்று இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.காதர், நீர்ப்பாசன தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.யாகூப் உட்பட பலாஹ் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதன் மூலம் பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் மையவாடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மாணவர்கள் உட்பட பொது மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் இதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஹ்மத் மன்சூருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.  

இத்திட்டத்திற்கு வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனம் முழுமையான அனுசரணை வழங்கி வருவதாகவும் குறுகிய காலத்தினுள் மேம்பால நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பொது மக்களுக்குத் தேவையான பல்வேறு மனித நேய சமூகப் பணிகள் தமது அமைப்பின் ஊடாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment