Tuesday, June 25, 2024

நைட்டாவின் தீயணைப்பு துறைசார் கற்கையை பூர்த்தி செய்தார் கே.எம். றூமி.!

கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தர் கே.எம். றூமி அவர்கள் நைட்டா நிறுவனத்தால் நடாத்தப்பட்ட தீயணைப்பு துறைசார் NVQ Level-4 கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, அதற்கான சான்றிதழை பெற்றுள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள நைட்டா நிறுவனத் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் நிறுவனத் தலைவரினால் இவருக்கான சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவர் இதற்கு முன்னரும் தீயணைப்பு துறைசார் தொடர்பில் பல்வேறு நிறுவனங்களின் கற்கைகளையும் பயிற்சிகளையும் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









No comments:

Post a Comment