-அஸ்லம் எஸ். மெளலானா-
சாய்ந்தமருது பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாசலில் இயங்கி வருகின்ற அல்குர்ஆன் மதரஸாவில் குர்ஆனை மனனமிடும் ஹிப்ளு மற்றும் ஷரீஆ பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இந்த மத்ரஸாவில் இணைந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பள்ளிவாசல் இமாம் மற்றும் நிருவாக சபை உறுப்பபினர்களும் நலன் விரும்பிகளும் பங்கேற்றிருந்தனர்.
இங்கு அல்குர்ஆனை பார்த்து ஓதுதலுக்கு மேலதிகமாக அல்குர்ஆனை மனனமிடுதல் மற்றும் ஷரீஆ வகுப்புக்களும் இடம்பெறவுள்ளதாக ஹிஜ்ரா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்துள்ளார்.
நாளை புதன்கிழமை முதல் இவ்வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜ்ரா பள்ளிவாசலானது கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் காவு கொள்ளப்பட்டு உயிர் நீத்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுகதாக்களின் நினைவாக உருவாக்கப்பட்ட சுனாமி மீள்குடியேற்ற கிராமமான பொலிவேரியன் கிராமத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment