கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் முதலாவது தடுப்பூசி பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த திங்கள் தொடக்கம் நாளை வியாழன் வரை 04 நாட்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை வரை இடம்பெற்று வந்த நிலையில், கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் முடிவடைந்து விட்டதால், நாளை வியாழக்கிழமை (02) கல்முனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகிறேன்.
மீண்டும் தடுப்பூசி கிடைக்கப் பெற்றதும் எமது தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்படும். இது பற்றிய அறிவிப்புக்கள் காலக்கிரமத்தில் மேற்கொள்ளப்படும். குறித்த அறிவிப்பு மேற்கொள்ளும்போது தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
Dr ஏ.ஆர்.எம்.அஸ்மி
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி
No comments:
Post a Comment