Saturday, October 22, 2022

ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன்-02 கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்..!

-பாறூக் ஷிஹான்-

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 'ஸஹிரியன் பழைய நண்பர்கள் அமைப்பு' (ZOFA) ஏற்பாட்டில் இடம்பெறும் மெற்றோ பொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் (ZPL) சீசன்-02 கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியது.

இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து 29 அணிகள் பங்குகொள்ளும் 07 ஓவர்கள் கொண்ட குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கெளரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.மலிக், விசேட அதிதியாக முன்னாள் அதிபர் முஹம்மத் உட்பட ஏற்பாட்டுக் குழுவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமான கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை 24ம் திகதி  நிறைவடையவுள்ளது.

மெற்ரோபொலிடன் ஸஹ்ரியன் பிரிமியர் லீக் சீசன்-02 போட்டியில் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு 25,000 ரூபா பணப் பரிசும் சாம்பியன் கிண்ணமும், இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு 15,000 ரூபா பணப் பரிசும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







No comments:

Post a Comment