-அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை சந்தான்கேணி பொது மைதானத்தை செப்பனிடும் வேலைத் திட்டத்தை கல்முனை மாநகர சபை இன்று ஆரம்பித்துள்ளது.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளின் பேரில், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் அவர்கள் விடுத்துள்ள அவசர பணிப்புரைக்கமைவாக மைதானத்தை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ், இம்மைதானத்தின் காடுமண்டியிருந்த பகுதிகள் கனரக வாகனங்கள் கொண்டு, அகற்றப்பட்டு, செப்பனிடப்பட்டு வருகின்றன.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான பெஸ்டர் றியாஸ் அவர்கள், முதல்வரை நேரடியாக சந்தித்து இவ்வேண்டுகோளை முன்வைத்து, மைதானத்தை அவசரமாக செப்பனிப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
தமது வேண்டுகோளையேற்று துரித நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மாநகர முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் சமீம் அப்துல் ஜப்பார் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment