Monday, October 17, 2022

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு..!

-பாறுக் ஷிஹான்-

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழக 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான கழக வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஏ.எம்.றியாஸ் தலைமை தாங்கியதுடன் ஏ.ஜே.சமீம் நெறிப்படுத்தலில் புதிய நிர்வாக தெரிவு  தொடர்பில் உத்தியோக பூர்வமாக சபையில் அறிவித்தனர்.

இதற்கமைய தவிசாளர் -ஏ.எம். றியாஸ், துணை தவிசாளர் -பி.எம் கலில் றகுமான்,  தலைவர் -ஏ.டபிள்யூ.எம் ஜெஸ்மீன்,  பிரதி தலைவர் -ஏ.மன்சூர் , உப தலைவர்- என்.சங்கீத், உப தலைவர்- ரி.எம்.றிபாய் ,பொதுச் செயலாளர்- ஏ.ஜே.சமீம், உப செயலாளர்- எஸ்.என்.ராஜ்குமார், பொருளாளர்- நதீர் பாறுக், உப பொருளாளர்- ஏ.எஸ்.றம்ஸீர், கணக்கு பரிசோதகர் -சுந்தரலிங்கம், இணை முகாமையாளர்கள் -ஏ.எல்.எம் சலீம், சபீர் ,ஊடக செயலாளர்- பாறுக் ஷிஹான், பிரதம பயிற்றுவிப்பாளர்- யு.எல் ஹிலால், பயிற்றுவிப்பாளர்- (பந்து வீச்சு) பி.மதன், பயிற்றுவிப்பாளர்- (துடுப்பாட்டம்) எம்.எஸ்.அஸ்பர், பயிற்றுவிப்பாளர் - (களத்தடுப்பு) எம்.செந்தூரன், இணைப்பாளர்- ஏ.எம் நாஸர், பிரதான இணைப்பாளர்- பி.எச்.எம்.முபீன் ,இணைப்பாளர் -ரி.எம் ஜஹான், இணைப்பாளர் -ஏ.லவக்குமார், இணைப்பாளர் -றகுமான், போசகர்கள் -ஹிபத்துல் கரீம், எம்.பி.அக்மல், எம்.ஏ.நஜீமுத்தீன், ஏ.எல் றபீக், வி.வரதன், ஆலோசகர்கள் வைத்தியர்களான ஜெ.எம்.றிலான், ஜி.எம்.கமால், எஸ்.தர்மலிங்கம் ஆகியோர் புதிய நிர்வாக தெரிவில் உள்வாங்கப்பட்டனர்.

இதன்போது இப்பிராந்தியத்தை மையப்படுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

சுமார் 35 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்ற இக்கழகத்தில் பல்லின மக்கள் உள்வாங்கப்பட்டு இயங்குவதுடன் பிரதேச வாதமற்ற ஒரு சிறப்பான கழகமாக இப்பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிராந்தியத்தில் நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா அனர்த்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.







No comments:

Post a Comment