அத்தியாவசிய வழக்குகளுக்காக மட்டுமே நீதிமன்றத்தைத் திறக்க வேண்டும் என்றும், புதிதாக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான சந்தேக நபர்களை மட்டும் நீதிமன்றத்துக்கு அழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளில் சந்தேக நபர்களையும் பிரதிவாதிகளையும் அழைப்பதற்கு அவர்களின் சட்டத்தரணிகளின் பிரதிநிதித்துவம் மட்டுமே போதுமானது என்று சுற்றறிக்கை மூலம் நீதிபதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், வழக்கறிஞரின் பிரதிநிதித்துவத்துடன் மட்டுமே அழைப்பாணை அனுப்பவும் மற்றும் மீதமுள்ள நடவடிக்கைகளை ஒத்திவைக்கவும் மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
25 சதவீத நீதிமன்ற ஊழியர்களை மட்டுமே கடமைக்கு அழைக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment