அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சகோதரர் மர்ஹூம் எம்.எல்.லாபிர் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டதிலிருந்து, கேகாலை மாவட்டம், மாவனெல்லை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையிலும், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்ததோடு, ஊடகத் துறையிலும் உயரிய பங்களிப்புக்களைச் செய்து வந்திருக்கின்றார்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில், "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் நடைபெற்ற முக்கியமான பல கூட்டங்களில் இயன்றவரை கலந்துகொண்டிருக்கின்றார்.
கண்டி, பொல்கொல்லையில் இறுதியாக நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அவர் வருகை தந்து முழு நாள் நிகழ்வுகளிலும்,மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜென்னத்துல் பிர்தௌஸூல் அஃலா என்ற சுவன வாழ்வை வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதோடு , அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும்,உறவினர்களுக்கும் கட்சியின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Media Unit
No comments:
Post a Comment