இலங்கையில் கொரோனாவின் பரவல் பேரழிவு நிலையை அண்மித்துவிட்டது. செயலற்று இருப்பதை விட தாமதமாகவேனும் செயற்படுவது நன்று. எனவே, பேரழிவு நிலைக்குச் செல்லும் முன்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவாறு மீண்டும் ஒரு முறை நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஜனாதிபதியிடமும் அரசிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும் அரசுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் எழுதியுள்ள ஒரு திறந்த மடலிலேயே மருத்துவ நிபுணர்களின் சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மருத்துவ நிபுணர்களின் சங்கத்தினராகிய நாங்கள் கொரோனா வைரஸின் டெல்டா திரிபானது வேகமாகப் பரவுவதால் ஏற்படக்கூடிய அழிவு பற்றி உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை மருத்துவ சங்கம், சுகாதாரப் பரிசோதகர்கள் அத்துடன் மற்றைய அனைத்து சுகாதார சேவை பணியாளர்கள் எல்லோரும் கொண்டுள்ள கருத்தையே கொண்டிருக்கின்றோம்.
No comments:
Post a Comment