Friday, December 27, 2024

கல்முனை மாநகர ஆணையாளராக றாபி நியமனம்.!

(சாய்ந்தமருது செய்தியாளர்)

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஏ. ரி. எம். றாபி அவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று வெள்ளிக்கிழமை (27) நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் இவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த இவர் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளராகவும் பல பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற என்.எம். நௌபீஸ் அவர்கள், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை முன்னர் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி, கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளரா பதவியுயர்வு பெற்றுச் சென்ற ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2025.01.01 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனங்கள் வழங்கபட்டுள்ளன.

No comments:

Post a Comment