Thursday, January 23, 2020

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு தேசிய தூய்மை உற்பத்தி விருது..!








(அஸ்லம் எஸ்.மௌலானா)

சுகாதார சேவையை வினைத்திறனுடன் சிறப்பாக மேற்கொண்டமைக்காக கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த வைத்தியசாலைக்கு 2019ஆம் ஆண்டுக்கான 'தேசிய தூய்மை உற்பத்தி விருது' கிடைக்கப் பெற்றுள்ளது.

கொழும்பு வோட்டர் எட்ஜ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய தூய்மை உற்பத்தி விருது விழாவில் இதற்கான வெண்கல விருது மற்றும் சான்றிதழ் என்பவற்றை இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

சுகாதார சேவை வழங்கல் நிறுவனங்களினாலும் ஏனைய தொழில்சார் நிறுவனங்களாலும் விண்ணப்பிக்கப்பட்ட பல விண்ணப்பங்களுக்கு மத்தியில் கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த வைத்தியசாலை அதிக மதிப்பெண் பெற்று இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது .

இவ்விருது பெற்றமையை கௌரவித்து வைத்தியசாலை நிர்வாகத்தினாரால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட வரவேற்பு நிகழ்வு ஒன்று நேற்று புதன்கிழமை (22) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதேவேளை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி சுற்று சூழலியல் விருது விழாவில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை தேசிய மட்டத்தில் வெள்ளி விருது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment