Wednesday, July 7, 2021

உள்ளூராட்சி மன்றங்களின் தற்காலிக ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம்..!

உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 8 ஆயிரம் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அவர் நிதியமைச்சர் என்ற ரீதியில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முன்மொழிவை சமர்ப்பிப்பார் என்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்  அமைச்சரவைக் கூட்டத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment