Sunday, July 31, 2022

மாகாண பொதுச் சேவை செயலாளர் வெளி நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்வது நிருவாக விதி மீறலாகும்..!

இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவிகையில்;

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஜுன் 16 இல் இடம்பெற்ற வலயக் கல்வி பணிப்பாளர் நேர்முக பரீட்சையில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் கலந்து கொண்டிருந்தார். இது தவறு என கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளதுடன் அதுபற்றி பிரதம செயலரிடம் தொலைபேசி மூலமும் தெரிவித்துள்ளேன்.

இதேவேளை கல்வித்துறை உயர் பதவிக்கு நடாத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் கல்வி திணைக்கள தலைவர் என்ற வகையில் மாகாண கல்வி பணிப்பாளர் குறித்த நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ள வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு நடைபெறாமல் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் மூவர் மட்டும் கலந்து கொண்டமை இலங்கை நிருவாக சேவை மேலாதிக்கமாக இருக்கலாமோ அல்லது இலங்கை கல்வி நிருவாக சேவை

உத்தியோகத்தர்களை மலினப்படுத்தும் செயற்பாடோ என சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment