Tuesday, July 4, 2023

மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பைத் தடுக்க பைசால் காசீம் அவசர நடவடிக்கை.!



-NM நஸீன்-

மாளிகைக்காடு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக கடற்கரை மிக வேகமாக பாதிக்கப்பட்டு அன்மித்த கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவிடயமாக மீனவர் அமைப்புக்கள் மற்றும் மாளிகைக்காடு கிழக்கு வட்டார முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் MH நாஸர் ஆகியோர் திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்களின் கவணத்திற்கு கொண்டு வந்ததற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்களுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பாதுகாப்புத் தினைக்களப் பொறியியலாளர் எம். துளசிதாஸன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜே. ஜெகராஜன், கல்முனை மாவட்ட கடற்றொழில் உதவி ஆணையாளர் எஸ். ஸ்ரீரஞ்சன் மற்றும் கரையோரப் பாதுகாப்பு வெளிக் கள உத்தியோகத்தர் காரைதீவு பிரதேசத்திற்குப் பொறுப்பான தஸ்தகீர், சாய்ந்தமருது பிரதேசத்திற்குப் பொறுப்பான நுஸ்றத் அலி ஆகியோரும் வருகை தந்தனர்.

உயர்மட்டக் குழுவினர் சேதமடைந்த இடங்களைப் பார்வையிட்டதும், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம், ஜனாஸா நலன்புரி அமைப்பு, மொத்த மீன் வியாபார வர்த்தக சங்கம், ஆழ்கடல் மீன்பிடிச் சங்கம், சிறு படகு உரிமையாளர் சங்கம், ஆகியவற்றின் பிரதிநிகள் மற்றும் பொது மக்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துறையாடலில் பைசால் காசீம் Mpயின் வேண்டுதலுக்கிணங்க  முதற் கட்ட தற்காலிக ஏற்பாடாக லியோ பேக்கில் மண் நிரப்பி கரையோரத்தை அரிப்பில்லிருந்து பாதுகாப்பதற்கும் பின்னர் நிரந்தத் தீர்வொன்றை கதியில் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வேலை நாளை மறு தினம் வியாழக்கிழமை (04.07.2023) ஆரம்பிக்கப்படும் என கரையோரப் பாதுகாப்பு தினைக்களப் பொறியியலாளர் எம். துளசிதாஸன் இங்கு குறிப்பிட்டார்.

















No comments:

Post a Comment