Monday, August 23, 2021

கல்முனை பொலிஸ் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட 08 கொரோனா தொற்றாளர்கள்..! சுற்றிவளைப்பில் அகப்பட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதி..!


(அஸ்லம் மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 08 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் உட்பட அங்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் வருகை தந்திருந்த பொது மக்கள் உட்பட 100 பேருக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரண்டு பொலிஸார் மற்றும் 06 பொதுமக்கள் உட்பட 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

அதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கல்முனை, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களில் தேவையின்றி வீதிகளில் நடமாடுவோர் சுற்றிவளைக்கப்பட்டு, அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் சிலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 03 நாட்களாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி, அத்தியாவசிய தேவை எதுவுமின்றி எவரும் தமது வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என கண்டிப்பாகக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.



metromirrorweb@gmail.com

No comments:

Post a Comment