குருணாகலை உயன்தன பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 170,000 கிலோ கிராம் சீனித் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று 04 களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி, அரசுடமையாக்கப்பட்டதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.
வத்தளை பகுதியில் கடந்த 08 மாதங்களாக பதுக்கி வைக்கப்பட்டு, பாவனைக்குதவாத சீனியாக மாறியுள்ள 11070 மெட்ரிக் தொன் சீனி கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment