Monday, September 6, 2021

ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அவரின் மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கிற்காக இன்று அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment