Mohamed Nizous
முடக்கம் வந்தால்
கிடைக்கும் உதவியில்
எடுக்கும் கூட்டம்
ஏதோ வாழும்..
செல்வக் கூட்டமும்
சிரமங்கள் இன்றி
உள்ளிருந்து கொள்ளும்
உள்ளதால் வாழும்..
எனினும் அவதியில்
இடைத்தரம் மாட்டும்
தானாய்ப் போராடும்
தன் கஷ்டம் மறைக்கும்..
நடுத்தர வர்க்கம்
நலிந்து போனாலும்
நடுத்தெரு வராது
அடுத்தவர் அறியார்..
பொல்லாத கெளரவம்
பொல்லோடு நிற்க
சொல்லாது மறைப்பார்
சோறுமில்லா நிலையை..
பார்ப்பவர் நினைப்பார்
பக்கா வாழ்வென
யார்க்கும் இவர் நிலை
இலகுவில் புரியாது..
அன்றாடம் உழைத்து
அதில் வரும் லாபத்தில்
நன்றாக வாழ்ந்தவர்
நாதியின்றி நிற்பார்..
ஆறேழு நாட்கள்
அப்படி இப்படி
போராடி சமாளிப்பார்
ஊரார் அறியார்..
ஆனால் தொடர்ந்து
அதே நிலை இருந்தால்
தான் பசி இருப்பார்
தன் பிள்ளை வயிறார..
இவர்களை அறிந்து
இரகசியமாய் உதவல்
சுவர்க்கத்தை தரும்
கவனத்தில் கொள்வோம்..!
No comments:
Post a Comment