(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை யூத் விளையாட்டுக் கழகத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும் பவுண்டேஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, கழக நிர்வாகிகளிடம் அவற்றை கையளித்தார்.
அத்துடன் ரஹ்மத் மன்சூர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் எம்.சப்றாஸ் உட்பட ரஹ்மத் பவுண்டேசன் முக்கியஸ்தர்களும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment