(அஸ்லம் எஸ்.மௌலானா)
முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல் எழுதிய 'வணிக விதானம்' நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (06) மருதமுனை பொது நூலக சமூக வள நிலையத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அத்துடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் முகாமைத்துவ பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.குணபாலன் விமர்சன உரையையும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம்.ஏ.சமீம், நூல் ஆய்வுரையையும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடதிபதி கலாநிதி சித்தி சபீனா ஹசன் வாழ்த்துரையையும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் உட்பட பல்கலைக்கழக பீடாதிபதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், எழுத்தாளர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Pix By ALM.Sinas & M.I.Samsudeen
No comments:
Post a Comment