Wednesday, August 2, 2023

கல்முனை வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு.!

-பாறூக் ஷிஹான்-

கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப் பிரிவு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஏ.சி.எம். ஆபீத் என்ற திருமணமான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவர் மனநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம்  நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர்  சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எல் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment