Wednesday, January 19, 2022

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளராக ஐ.எல்.எம்.றிபாஸ் கடமையேற்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் இன்று புதன்கிழமை (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 03 வருடங்களாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த நிலையிலேயே வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கடமையேற்பு நிகழ்வில் இடமாறிச் செல்லும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் உட்பட வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்திய அதிகாரிங்கள் மற்றும் உத்தியோகத்தர்களினால் வரவேற்கப்பட்ட புதிய பணிப்பாளர் டொக்டர் றிபாஸ் அவர்கள், அனைவரது வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்.

இன, மத, பிரதேச வேறுபாடின்றி பிராந்திய சுகாதாரத்துறையை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த புதிய பணிப்பாளர் டொக்டர் றிபாஸ், அதற்காக அனைவரதும் ஒத்துழைப்பை எதிரிபார்ப்பதாகவும் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

காத்தான்குடியை சேர்ந்த வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்கள் கொழும்பு கண் தேசிய வைத்தியசாலை உட்பட பல்வேறு வைத்தியசாலைகளில் கடமையாற்றியிருப்பதுடன் வைத்திய நிர்வாகத்துறையில் சிறந்த தேர்ச்சியும் ஆளுமையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.





metromirrorweb@gmail.com

No comments:

Post a Comment