Wednesday, February 16, 2022

பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார் சப்ரி முக்தார்..!

(சர்ஜுன் லாபீர்)

அம்பாறை, உஹன பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றும் எம்.எம்.முஹம்மட் சப்ரி, பொது நிர்வாக அமைச்சினால் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரது கடிதத்திற்கமைய 2021.12.29 ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர் கோமரன்கடவெல, மஹாஓயா ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் அவர்களின் புதல்வராவார்.

கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment