Wednesday, February 16, 2022

வீடு தேடிச் சென்று உதவும் யஹியாகான் பவுண்டேஷன்..!

யஹியாகான் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பினால் வசதி குறைந்த குடும்பத்தினருக்கு உதவும் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் ஓர் அங்கமாக சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியில் வசிக்கும் குடும்பமொன்றுக்கு அமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளருமான ஏ.சி.யஹியாகான் நேற்று முன்தினம் வீடு தேடிச் சென்று நிதியுதவி வழங்கி வைத்துள்ளார்.

குறித்த வீட்டில் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற மின்சார தேவையை நிவர்த்தி செய்வதற்கே இந்நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யஹியாகான் பவுண்டேஷன் செயலாளர் ஏ.சி.எம்.றியாழ், பிரதித் தலைவர் எம்.சியாம் மற்றும் இணைச் செயலாளர் எம்.ஏ.எம்.றஸ்பாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment