Wednesday, February 2, 2022

மாளிகைக்காடு கிழக்கில் டெங்கு ஒழிப்பு சிரமதானமும் மரநடுகை விழாவும்..!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று டெங்கு ஒழிப்பு சிரமதானமும் மரநடுகை விழாவும் இடம்பெற்றன.

மாளிகைக்காடு கிழக்கு கிராம உத்தியோகத்தர் ஏ.எம்.நஜீம் அவகளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பொது அமைப்புகலின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.

காரைதீவு பிரதேச செயலாளர் ஜெ.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து  வைத்தார். இதில் காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர், பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில், அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அப்துல் மஜீட், ஸம் ஸம் சனசமூக நிலையத் தலைவர் எம்.எச்.நாஸர், ஜனாஸா நலன்புரி அமைப்பின் செயலாளர் ஆர்.எம்.ரஊபி, றியல் பவர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.சர்ஜுன் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment